Tuesday 27 September 2011

உறவினர்கள் சந்திப்பு !

அப்போது ...............

                       கதவை திறந்தேன். வேலூர் வந்துவிட்டது . நான் சோகமாகவும் காலை உணவு   சாப்பிடாமலும் இருந்ததை   பார்த்து ஏட்டு   அவர்   பையிலிருந்து   கத்தியை  எடுத்து  தந்தார் . "நீ   எங்கோ   பரக்க பார்த்துக்கொண்டிருந்தாய்  அதனால்தான்    கத்தியை   எடுத்து  வைத்தேன்  . இனிமேல்   கவனமாக இரு   என்று  சொன்னார் .   எனக்கு  அப்போதிருந்துதான்   உயிரே  வந்தது .  கைதிகளை  நல்லபடியாக  சிறையில்   ஒப்படைத்துவிட்டு   கடலூர்  வந்துவிட்டோம் . மற்ற ஒருமுறை   பாளையம்கோட்டை   சிறுவர்  சீர்திருத்தப்பள்ளி   ஜெயிலுக்கு   ஒரு  சிறுவனை   கொண்டுபோகவேண்டி    ஒரு தலைமை  காவலருடன்   எனக்கு  டுட்டி .   சந்தோசமாக   சென்றேன்  .  இந்தமுறை   வேறு  ஒரு தலைமை   காவலருடன் சிறுவனை கூட்டிக்கொண்டு  போனோம் .  பாளையம்கோட்டை   வந்து  சிறுவர் சீர்திருத்த   பள்ளியில்   சிறுவனை ஒப்படைத்தோம் .   தலைமை   காவலருக்கு   நானே   சாப்பாடு  வாங்கி  கொடுத்துவிட்டு " ஏட்டையா!   நான்   எனது  சொந்த   ஊருக்கு   சென்று  வருகிறேன்"  என்று சொன்னேன் . "சரி   நாளைக்கு   மாலையில்   நமக்கு  ரயில். வந்துவிடு"  என்று சொன்னார். எனக்கு சந்தோசம் .

                            ரயிலில்   புறபட்டேன்.   மீளவிட்டான்   ரயில் நிலையத்தில்   எறங்கினேன் .  ஒரு   கிலோமீட்டர்   நடந்து   போகவேண்டும் .   போகும்போது   புஞ்சை  காட்டில்   ஓடையில்   சிலர்  சீட்டு  விளையாடிகொண்டிருந்தார்கள் .  என்னை   கண்டதும்   ஏய்    போலீஸ்   வருது  என்று எல்ல்லோரும் ஓடினார்கள்  .  நான்  பக்கத்தில்  போனவுடன்   நம்ம   ராமசாமி   எல்லோரும்  வாங்க என்று மற்றவர்களை   கூப்பிட்டான் ஒருவன் .  எல்லோரும்  என்னை  பார்த்து சந்தோசப்பட்டார்கள் .   நீ   போலீஸ்  வேலையா    பார்க்கிறாய்  என்று   ஆச்சரியமாய்  கேட்டார்கள் . ஆம்  என்று  சொல்லிவிட்டு  வீட்டிற்கு  போனேன் . அம்மாவும்   தங்கை  பாப்பாவும் இருந்தார்கள் .  ஊரில்   சொந்த பந்தங்கள்   எல்லோரும்   பார்த்து   சந்தோசபட்டார்கள்.  அன்று  இரவு வீட்டில்     தங்கினேன் .   மறுநாள்  காலையில்   அண்ணன்   ராமர்   வீட்டுக்கும்   சின்னக்காள் வீட்டிற்கும்   போனேன் .   அவர்களுக்கும் ரொம்ப   சந்தோசம் .  எல்லோரிடமும்   விடைபெற்று    தூத்துக்குடி   சித்தப்பா   திரு  ராமசாமி   அவர்கள்  வீட்டிற்கு   போனேன் .  சித்தி , பெரிய   சித்தப்பா  திரு  பாண்டியன்  சித்தி   பிரமு ,  தம்பிமார்   மாடசாமி , தர்மலிங்கம்   எல்லோரையும்   பார்த்துவிட்டு   அன்றைக்கு   மதிய   உணவு சித்தப்பா   வீட்டில்  சாப்பிட்டேன் .   

                       உடனே  புறப்பட்டு   பஸ்ஸில்   வாகைகுளத்தில் இறங்கி   திம்மராஜபுரம்    ஒரு கிலோமீட்டர்   நடந்து சென்றேன் அப்பொழுது புஞ்சையில்  களை பறித்து கொண்டிருந்தவர்கள்    அடியே   நம்ம ஊருக்கு  போலீஸ் வருதுடி  என்று ரோட்டோரம்  ஓடி  வந்தார்கள் .   அதில்   எனது   பெரியப்பா   மகன்  சித்ரவேல்  அவர்கள்   மனைவியும்   வந்தார்கள் .   அண்ணி   என்னை தெரியவில்லையா     நான்தான்   ராமசாமி என்றேன் .   அதன் பின்புதான்  அவர்களுக்கு    தெரிந்தது .   பிறகு   திம்மராஜபுரம  வந்து   அண்ணன் திரு சாமுவேல் ,   மாசில்லாமணி ,  சித்ரவேல் பெரிய வேலு ,  சின்னவேலு , செல்லையா ,  தனுஷ்கோடி   மற்றும்   அவர்கள் குழந்தைகள்   அனைவரையும்   பார்த்துவிட்டு    காப்பி குடித்துவிட்டு புறப்பட்டேன் .   எல்லோருக்கும்  ரொம்பவும்  சந்தோசம் . .   அண்ணன்   மாசில்லாமணி   அவர்கள்   நம்   குடும்பத்தில்   போலீஸ் வேலையில் தம்பி   ராமசாமி தன   முதலாவதாக   சேர்ந்துள்ளான்  என்று பெருமையாக சொன்னார்கள் . அதன்பின் வேகமாக   புறப்பட்டு திருநெல்வேலி   ரயில்   நிலையம் நோக்கி வந்தேன். நேரமாகி விட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. ரயிலை தவறவிட்டு மீண்டும் ஏதேனும் பணிஷ்மன்ட் கிடைக்குமோ என்று பயந்தேன். வேகமாக நடந்தேன்  .                                           அப்போது..................   
            

1 comment:

  1. எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் நான் படிக்கும் மிகவும் விருவிருப்பான தொடர் இதுதான். மிகவும் நன்றாக இருக்கிறது அப்பா.

    அன்பு மகள்,
    சித்ரா.

    Thaathaa please come to bangalore - Keerthana

    ReplyDelete