Thursday 15 September 2011

வளர்ந்தேன்......

                        .................... என் அண்ணன் என் பின்னால் வந்து எனது வலது காதோடு சேர்த்து ஓங்கி ஒரு அடி கொடுத்து "வாத்தியிடம் போய் என்னடா சொன்னாய்?" என்று கத்தினார். அன்று அந்த வலது காத்து கேட்காமல் போனது தான் இன்று வரை சரியாகவில்லை. அத்துடன் எனது அண்ணன்மார் இருவருமே பள்ளிக்கு முழுக்கு போட்டு விட்டார்கள். 
அந்த மீளவிட்டான் கிராமத்தில் படித்த நான் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவனாகவே படித்தேன். அதற்காக எனக்கு அந்தந்த வகுப்பிற்குள்ள புத்தகங்கள் பரிசாக கிடைத்து விடும். அந்த கிராமத்து பள்ளியில் ஐந்தாம் வகுப்புகள் வரை தான் இருந்தது. அங்கே முடித்து விட்டு தூத்துக்குடியிலுள்ள எங்கள் சித்தப்பா ( எனது சித்தியின் கணவர் ) ராமசாமி அவர்களிடம் ஏதாவது பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்றேன். தூத்துக்குடி சேவியர் உயர்நிலைப்பள்ளியில் சேர்த்தார்கள். உயர்நிலைப்பள்ளி என்பதால் படிப்பு சற்று கடினமாகவும் ( ஆங்கிலமும் சேர்த்து படிக்க வேண்டும் ) இருந்தது. எனது சித்தப்பா ராமசாமி அவர்கள் ஒரு சமூக ஆர்வலர்.தனது கையெழுத்து ஆங்கிலத்தில் மட்டுமே போடத்தெரிந்தவர். பள்ளி சென்று   படித்ததில்லை. ஆனால் சாதாரண கிராம அலுவலர் முதல் மத்திய மாநில அமைச்சர்கள் வரை நேரில் துணிச்சலாகவும் தைரியமாகவும் மக்கள் குறைகளை எடுத்து சொல்வதில் வல்லவர். மதுரா கோட்ஸ் மில்லில் பணி புரிந்து ஒய்வு பெற்றவர். பாதிக்கப்பட்டார் யாராயிருந்தாலும் நியாயமான கோரிக்கைகளுக்காக வலிய சென்று அவர்களுக்காக எங்கு வேண்டுமானாலும் போய் வாதாடுவார்.அவர் எனது சித்தியை திருமணம் செய்தால் மட்டும் உள்ள உறவு அல்ல. அவர் எனது தாயாருக்கு தாய்மாமன் திரு மாடசாமி அவர்கள் மகனாவார். அவரது மூத்த  சகோதரன் பாண்டியன் என்பவருக்கு இரண்டு aan குழந்தைக. அதில் மாத்தவன் கரியப்பா என்ற மாடசாமியை இவர்கள் எடுத்து தனது குழந்தையை விடவும் மேலாக வளர்த்து வந்தார்கள். இளையவன் தர்மலிங்கம். தனது பெற்றோருடன் வளர்ந்து வந்தான். 
                       நான் உயர்நிலை பள்ளியில் படித்து வரும்போது லீவு நாட்களில் என் தந்தையுடன் உப்பளத்து வேலைக்கு செல்வேன். அப்பொழுது மழை இல்லாமல் பஞ்சமாக இருந்தது.ஒரு படி அரிசி நாலனாவாக இருந்தது பஞ்சம் வந்தவுடன் எட்டணாவாக (அரை ரூபாய் ) இருந்தது. (ஒரு ரூபாய்க்கு பதினாரனா ) தூத்துக்குடியில் பயறு வகைகளை அவித்து வியாபாரம் செய்யும் குருசாமி என்பவர் கடை இருந்தது. அந்த கடையில் என் தந்தை நான் எப்பொழுது வந்து என்ன கேட்டாலும் என் கணக்கில் எழுதி கொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தார். அந்த கடையில் பயறு வாங்கி சாப்பிடவே பள்ளி விட்டவுடன் அங்கே சென்று விடுவேன்.ரெண்டணாவுக்கு பயறு வாங்கி தின்றபடியே ரெயில் தண்டவாளம் வழியே நடந்தே  ஊருக்கு வந்துவிடுவேன்.தினசரி இந்து கிலோமீட்டர் நடந்தே சென்று படித்து வருவேன். வீட்டில் அரிசி சோறு என்பது வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுகிழமை மட்டும் தான். மற்ற நாட்களில் கம்பு களி தான். சில நாட்களில் மத்யானம் பள்ளியிலிருந்து அந்த கம்பு களியை என் சித்தி வீட்டிற்கு கொண்டு செல்வேன்  அங்கே அந்த கம்பு களிக்கு குழம்பு ஊற்றி தருவாள். சிலநாட்களில் அரிசி சாதமே தருவாள். ஒரு நாள் நண்பர்களோடு தூத்துக்குடியில் சினிமாவுக்கு சென்று விட்டு இரவு ரெண்டு மணிக்கு நடந்து வந்து கொண்டிருந்தேன். அது ஒரு மேகாற்று காலம். நான் தூங்கி கொண்டே கனவு கண்டு கொண்டு வந்தேன். கனவு முள் செடிகள் வெட்டி குவியல் குவியலாக போடப்பட்டுள்ளது. அந்த முள் செடி காற்றில் உருண்டு வருகிறது. நாம் அங்குமிங்கும் விலக பார்க்கிறேன் முடியவில்லை. கடைசியில் அந்த முள் செடியை என் தலையால் முட்டி தாங்கி கொள்கிறேன். திடுக்கென்று கண்விழித்து பார்த்தால் ஒரு முள் மரத்தின் மீது தலையை முட்டி கொண்டு நிற்கிறேன். என் நண்பர்கள் எல்லோரும் சிரித்து கொண்டு என்னை தள்ளி விட்டு அப்புறம் வீட்டிற்கு கூட்டி கொண்டு வந்தார்கள்.

                                       மற்றொரு சமயம் பள்ளிக்கூடம் விட்டு தூத்துக்குடியிலிருந்து   வந்து கொண்டிருந்தேன். அது ஒரு கார்த்திகை மாதம். ஓலை கொழுக்கட்டை ரொம்ப விசேஷம். அதற்கு பனை மரத்து குருத்தோலை தேவை. நான் வரும் வழியில் சின்னக்கன்னுபுரம் என்ற ஊர் அருகில் ஒரு பனை மரத்தில் ஏறிவிட்டேன். ஓலையயும் வெட்டி கீழே போட்டு விட்டேன். ஆனால் .....................

2 comments:

  1. Dear Appa,
    Romba nallaa irukku. Really Superb!

    Migavum Swaarasiyamaaga irukkirathu athe samayam Mutrilum Unmai enpathaal aarvam athikarikkirathu.

    Ungal Vaarthai thelivaaga irukirathu. Ivvalavu gnaapagamaaga athanai neengal koorthiruppathu aachariyamaagavum perumai yaagavum irukirathu.

    Write more Appa. We are Proud to be your children.

    Anbu Magal,
    Chithra.

    ReplyDelete
  2. டியர் அப்பா,
    ரொம்ப நல்லா இருக்கு.

    மிகவும் ஸ்வாரசியமாக இருக்கிறது அதே சமயம் முற்றி இலும் உண்மை என்பதால் ஆர்வம் அதிகரிக்கிறது.

    உங்கள் வார்த்தை தெளிவாக இருக்கிறது. இவ்வளவு ஞாபகமாக அதனை நீங்ஙள் கோர்த்திருப்பது ஆச்சரியமாகவும் பெருமை யாகவும் இருக்கிறது.

    நிறைய பதிவு செய்யுங்கள் அப்பா ஆப்ப. எங்களுக்கு மிகவும் பெருமையாக
    உள்ளது.
    அன்பு மகள்,
    சித்ரா.

    ReplyDelete