Saturday 10 December 2011

தனிப்பிரிவுக்கு (special branch C.I.D) மாறுதல்:

அப்போது.....

                           தாரங்கதாரா கெமிக்கல் கம்பெனிக்கு வந்து அதன் துணைத்தலைவர் திரு M.A.ராமசாமி அவர்களை சந்தித்து மரியாதை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். அப்பால் ஒர்க்ஸ் மேனேஜர் திரு சித்தாராமையா அவர்களையும், ஆபீஸ் சூப்பிரண்டு திரு ஹரிஹரன் அவர்களையும் சந்தித்தேன். அவர்களது அறிவுரையின்படி பாதுகாப்பு தலைவர் திரு B.J.கருணாகரன்(A.D.S.P.,Reted.) அவர்களை சந்தித்தேன். அவர் நான் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் டூட்டி  செய்யும்போது தக்கலை காவல் துணை கண்காணிப்பாளராக இருதார்.அவர்களுக்கு மரியாதை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். கம்யுனிஸ்ட்  சங்க தலைவர் திரு S.I.சங்கரன், I.N.T.U.C.சங்க தலைவர் திரு கந்தசாமி மற்றும் தி.மு.க.சங்க தலைவர் ஆத்தூர் சண்முகம் ஆகியோர்களையும் சந்தித்து தொழிலாளர்களின் கோரிக்கை பற்றி விசாரித்தேன்.ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு தங்கரோஸ் அவர்களையும் சந்தித்து தொழிலாளர்களின் நிலைமை பற்றி சொன்னேன். மாவட்ட  தனிப்பிரிவு  அலுவலகத்துக்கும் அப்போதைக்கப்போது தொழிலாளர்களின் நிலவரம் பற்றி தகவல் சொல்லிவந்தேன்.

           மறுவாரம்  தனிப்பிரிவு வாராந்திர  கூட்டத்திற்கு  சென்றேன். அங்கு தனிப்பிரிவு ஆய்வாளர் திரு விஜயராமச்சந்திரன் அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். அப்பால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சி.துரைராஜ் M.A,B.L.,I.P.S. அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். அவர்களின் முகாம் எழுத்தர் திரு பி.பெரியசாமி அவர்களை சந்தித்தேன் . அவர்கள்  தாரங்கதாரா  கம்பனியில் துணைத்தலைவர் திரு எம்.எ.ராமசாமி அவர்களின் தனி உதவியாளர் திரு வரதன் எனது நண்பர் என்றும் நான் மிகவும் விசாரித்ததாக சொல்லுங்கள் என்று சொன்னார்கள். வாராந்திர கூட்டத்திற்கு தூத்துக்குடி தனிபிரிவு உதவி ஆய்வாளர் திரு ஜி.ஆஸ்டின், தலைமை காவலர் திரு D.A.செல்லப்பா, கோவில்பட்டி உதவி ஆய்வாளர் திரு நாகலிங்கம், தலைமைக்காவலர் திரு செல்லத்துரை பாண்டியன்,அம்பாசமுத்திரம் உதவி ஆய்வாளர் திரு வேலுசாமி,தலைமை காவலர் திரு சுப்பையா பாண்டியன், திருநெல்வேலி உதவி ஆய்வாளர் திரு பார்த்தசாரதி, தலைமைக்காவலர் திரு மலையாண்டி தேவர், திருவைகுண்டம் உதவி ஆய்வாளர் திரு U.சின்னசாமி ஆகியோர் வந்திருந்தார்கள். அந்த வாரத்தில் நடந்த தனிப்பிரிவு செய்திகளை அறிக்கை செய்து அறிவுரைகள் பெற்றோம்.

காவலர்  சீருடை  
           
                      ஒருசமயம் ஆறுமுகநேரி கெமிகல் கம்பெனியின் முன்னால் ரோட்டின் ஓரத்தில் இருவர் சண்டை போட்டு ஒருவனை அடித்து ரத்த காயங்களுடன் போட்டுவிட்டு போய்விட்டான்.அவன் ரோட்டோரத்தில் அழுது கொண்டிருந்தான். அப்பொழுது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில்  வந்த P.R.C.செக்குரிட்டி ஆபீசர் நின்று அவனை பார்த்திருக்கிறார். அவன் அய்யா என்னை காப்பாற்றுங்கள் என்று அழுதிருக்கிறான். அவர் காக்கி சட்டை, பேன்ட் 
போலீஸ் ஆபீசர் தொப்பி, ஸ்டார், எல்லாம் அணிந்திருந்ததை பார்த்த அந்த காயமடைந்த நபர் அந்த செக்குரிட்டி ஆபிசரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என்று நினைத்துகொண்டார். அந்த செக்குரிட்டி ஆபிசர் நேராக காவல்நிலையம் சென்று விஷயத்தை சொல்லிவிட்டு போனார். அப்பால் போலிசார் வந்து அந்த நபரை கூட்டிசென்று வழக்கு பதிவு செய்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். ஆனால் மறுநாள் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் திரு R.S.பாண்டியன் அவர்கள் மருத்துவமனைக்கு போய் அந்த காயம்பட்ட நபரை விசாரித்தார்கள். அந்த நபர், "நான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த வழியாக சப் இன்ஸ்பெக்டர் ரோட்டில் நின்று பார்த்துவிட்டு போய்விட்டார்" என்று சொல்லிவிட்டார். உடனே சப் இன்ஸ்பெக்டர் திரு தங்கரோஸ் அவர்களை ஆய்வாளர் கடுமையாக சாடினார். சப் இன்ஸ்பெக்டர் எவ்வளவோ எடுத்துசொல்லியும் ஆய்வாளர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் போலீஸ் தவிர வேறு எந்த அலுவலரும் காக்கி யூனிபாரம் போடக்கூடாது என்று சர்குலர் விடப்பட்டது.

ஆறுமுகநேரியில்        

               நான் மனைவி குழந்தையுடன் ஆறுமுகநேரியில் மாமனார் விட்டில் தங்க மிகவும் வசதியாக இருந்தது. மேலும் தனிபிரிவு ஆய்வாளர் திரு விஜயரமச்சந்திரன் அவர்கள் மனைவியின் பெரியம்மா வீடு ஆறுமுகநேரி  ராஜாமன்னியபுரத்தில் இருந்தது. அவர்கள் மக்கள் திரு செல்ல்லப்பா, திரு கங்கை ஆதித்தன், திரு A.V.ரவிபாண்டியன் (இவர் பின்னாளில் நீதிபதியாகி மறைந்தார்.) ஆகியோர் நல்ல தகவல்களை தருவார்கள். திரு கங்கை ஆதித்தன் அவர்கள் சங்கரேஸ்வரி மெடிக்கல் வைத்திருந்தார்கள். அந்த மெடிக்கல் ஷாப்பிற்கு நான் அடிக்கடி சென்று தகவல்களை சேகரித்து வருவேன். தட்ஷனமார நாடார் சங்க தலைவர் திரு P.S.ராஜா பலவேசமுத்து நாடார் அவர்கள் மக்கள் திரு விவேகானந்தன், திரு சதானந்தன் ஆகியோர்களும் நல்ல பல தகவல்களை தருவார்கள். மேலும் பேயன்விலையில் திரு பட்டுராஜன் அவர்களும் எனக்கு மிகவும் நல்ல நண்பர்கள்.

                     திருசெந்தூரில் காவலர் காலனியில் தலைமைக்காவலர் இல்லம் எனக்கு ஒதுக்கப்பட்டது. மறுநாள் மிளவிட்டான் சென்று அம்மாவை அழைத்துக்கொண்டு ஆறுமுகநேரி வந்து மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு காவலர் குடியிருப்பில் குடியேறினோம்.

                ஒருநாள் காவல்நிலையத்திலிருந்து தொலைபேசியில் மாவட்ட தனிப்பிரிவு ஆபிசுக்கு சில முக்கிய தகவல்களை சொல்லிக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஸ்ரீவைகுண்டம் D.S.P, திரு பால் தாமஸ் அவர்கள் வந்தார்கள். உடனே அவருக்கு மரியாதையை செய்துவிட்டு மிண்டும் தொலைபேசியில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். உடனே "அவர் மிகவும் கோபமாக என்னய்யா தகவல் சொல்லிக்கொண்டிருக்கிறாய். அதெல்லாம் வெளியே எங்கேயாவது இருந்து சொல்லவேண்டும்" என்று சொன்னார். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மறுநாள் ஸ்ரீவைகுண்டம் சென்று தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு செல்லமுத்து பாண்டியன் அவர்களை சந்தித்து தனிப்பிரிவு தகவல்களை சொல்லிவிட்டு D.S.P.திரு பால் தாமஸ் அவர்கள் கோபப்பட்ட விசயத்தையும் சொன்னேன். அவர் உடனே மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளரிடம் சொல்லிவிட்டார்.

             ஒரு வாரம் கழித்து திருச்செந்தூர் காவல் நிலையதிலிருந்து தனிப்பிரிவுக்கு மாற்றி எனக்கு திருசெந்தூரை தலைமையிடமாக இருக்கும்படி உத்தரவு வந்துவிட்டது. உத்தரவு கிடைத்த மறுநாளே திருச்செந்தூர் காவல் நிலையத்திலிருந்து  ரிலிவாகிவிட்டேன். எனது பணி திருசெந்தூர் சர்க்கிளுக்குட்பட்ட பகுதிகளில் தனிப்பிரிவு தகவல்களை சேகரித்து அனுப்பவேண்டும். கருமமே கண்ணாயினர் என்ற பழமொழிக்கிணங்க எனது பணியை திறம்பட செய்துவேந்தேன். 

தெய்வம் 

                     ஒரு சமயம் முருகன் கோயிலில் சின்னப்பா தேவர் அவர்களின் படமான தெய்வம் திரைப்பட படப்பிடிப்பு நடந்தது. அதைபர்க்க காவலர் குடி இருப்பிலுள்ள அனைவரும் போனார்கள் என்று என் மனைவி சொன்னாள். அன்று இரவு மனைவியுடன் படப்பிடிப்பை காண்பதற்கு சென்றிருந்தேன்.

                                                                                            அப்போது....

Friday 2 December 2011

திருச்செந்தூர் மாற்றம்!

அப்போது .....

நான் பயத்துடனே அவர்களை சந்தித்தேன். அவர்கள் முதலில் என்னை  நலம் விசாரித்தார்கள். பிறகு என்னிடம் "நீ  தனிப்பிரிவு தலைமை காவலராக வந்துவிடு. உன்னை திருசெந்தூர் மாற்றுகிறேன்" என்று சொன்னார்கள். "அய்யா!  ரொம்ப  சந்தோசம். தங்களது பொறுப்பின் கீழ் வேலை செய்ய நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும்" என்று சொல்லிவிட்டு சந்தோசமாக புளியரை வந்தேன். மனைவியிடம் சொன்னவுடன் அவளுக்கு நம் ஊர் பக்கத்திலேயே மாறுதல் கிடைப்பது பற்றி  ரொம்ப சந்தோசம். 

                    ஒரு வாரத்தில் மாறுதல் ஆர்டர் வந்தது. மாறுதல் ஆர்டர் கிடைத்த மறுநாளே புளியரையிலிருந்து ரிலிவானேன்.பெட்டி படுக்கையெல்லாம் கொஞ்சம்தான். எல்லாம் எடுத்துக்கொண்டு பஸ்சிலேயே புறப்பட்டோம்.  ஆறுமுகநேரி வந்து இரண்டு நாட்கள் இருந்துவிட்டு அப்பால் தூத்துக்குடிக்கு போனேன். சித்தி, சித்தப்பா எல்லோரிடமும் சொல்லிவிட்டு மீளவிட்டான்  போய் அம்மா, அண்ணன் ராமர், லக்ஷ்மணன் எல்லோரிடமும் சொல்லி விட்டு இரவு தங்கினேன். ஏழு நாட்கள் லீவு முடிந்து திருசெந்தூர் வந்து உதவி ஆய்வாளர் திரு தாமஸ் மாசில்லாமணி அவர்களிடம் ஆஜராகி பணிக்கு ரிப்போர்ட் செய்துகொண்டேன். ஆய்வாளர் திரு R.S.பாண்டியன் அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். இவர் கொஞ்சம் கறாரான ஆபிசர்.சில நேரம் அதிகாரிகளை ஏடாகூடமாக பேசிவிடுவார். 

                    அப்பொழுது சர்க்கிள் ரைட்டராக அம்மன்புரம் புதுகுடியை சேர்ந்த திரு சண்முகவேலு என்பவர் இருந்தார். நான் வேலூரில்  காவலர் பயிற்சியில் இருக்கும்போது இவர் என்னுடன் பயிற்சியில் இருந்தார். அப்பொழுது நல்ல பழக்கம். மேலும் எனது அக்காள் திருமதி சண்முகக்கனியின் கணவர் திரு முனியசாமி அவர்களின் நெருங்கிய உறவினர் . ஆய்வாளர் அவர்கள் என்னை காவல் நிலையத்தில் ரைட்டராக இருக்கும்படி உத்தரவிட்டார்கள் . அதன்படி தலைமைக்காவலர் ரைட்டராக பணியாற்றினேன் . ஒரு மாதம் கழித்து  சர்க்கிள் ரைட்டர் சண்முகவேல் ஆய்வாளரிடம் லீவு கேட்டுள்ளார். மாதாந்திர குற்றகூட்டம் முடிந்தபின் லீவில் போ என்று ஆய்வாளர் சொல்லியுள்ளார். காவல் நிலையத்திலேயே ரைட்டருக்குத்தான் அதிக பொறுப்பு. அதனால்தான் சர்க்கிள் தலைமையிடத்து காவல் நிலையங்களில் தலமைகாவலர்களை ரைட்டராக நியமிப்பார்கள். காவலர்களுக்கு சம்பளம் கொடுப்பது பணபதிவேடு எழுதுவது எல்லாம் ரைட்டர்தான் செய்யவேண்டும். சர்க்கிள் ரைட்டருக்கு சம்பளம் கொடுத்து விடாதே. மாதாந்திர குற்றகூடம் முடித்தபின் கொடு என்று ஆய்வாளர் அவர்கள் என்னிடம் சொல்லிருந்தார். ஆனால் சர்க்கிள் ரைட்டர் முன்னாடியே சம்பளத்தை ஆய்வாளர் வாங்கிக் கொள்ளசொன்னார் என்று தவறாக சொல்லி சம்பளத்தை வாங்கிசென்றுவிட்டார். அதற்காக ஆய்வாளர் என்னை மிகவும் கடிந்துகொண்டார்.நானும் சர்க்கிள் ரைட்டரை காட்டிக் கொடுக்காமல் மவுனமாக இருந்துவிட்டேன்..

தாரங்கதார கெமிக்கல் கம்பெனி பிரச்சனை:


                       ஆறுமுகநேரி சாகுபுரம் தாரங்கதாரா கெமிக்கல் கம்பெனியில் 1969 போனஸ் பிரச்சனையில் திரு எஸ்.ஐ .சங்கரன் தலைமையில் உள்ள   கம்யுனிஸ்ட் சங்கத்தினர் கம்பெனி நிறுவனர் திரு எஸ்.கே.ஜெயின் அவர்களை அவர் அறையிலேயே ஏழு மணி நேரம் பூட்டி வைத்து  கேரோ செய்து அவரை போன்கூட பேச அனுமதிக்காமல் இருபது சதம் போனஸ் வேண்டும் என்று கையெழுத்து வாங்கிவிட்டார்கள். மறுநாள் சென்னைக்கு I.G. திரு F.V.அருள் அவர்களுக்கு போன் செய்து கம்பெனியில் நடந்த போனஸ் விவரங்களை சொன்னார்கள். அவர்கள் உடனே திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தெரிவித்தார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனே தாரங்கதாரா கெமிகல் கம்பெனிக்கு ஒரு தனிப்பிரிவு தலைமை காவலரை நியமித்து அங்கு தொழிலாளர்களின் நடவடிக்கையை கண்காணிக்கவேண்டும் என்று உந்தரவு போட்டார்கள். மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து என்னை அந்த டூட்டிக்கு  நியமித்து உத்தரவு  வந்தது. ஆறுமுகநேரி பக்கத்தில் உள்ள ஊர் என்பதால் மிகவும் சந்தோசம்.

                                                                                         அப்போது.........