அப்போது ...............
கதவை திறந்தேன். வேலூர் வந்துவிட்டது . நான் சோகமாகவும் காலை உணவு சாப்பிடாமலும் இருந்ததை பார்த்து ஏட்டு அவர் பையிலிருந்து கத்தியை எடுத்து தந்தார் . "நீ எங்கோ பரக்க பார்த்துக்கொண்டிருந்தாய் அதனால்தான் கத்தியை எடுத்து வைத்தேன் . இனிமேல் கவனமாக இரு என்று சொன்னார் . எனக்கு அப்போதிருந்துதான் உயிரே வந்தது . கைதிகளை நல்லபடியாக சிறையில் ஒப்படைத்துவிட்டு கடலூர் வந்துவிட்டோம் . மற்ற ஒருமுறை பாளையம்கோட்டை சிறுவர் சீர்திருத்தப்பள்ளி ஜெயிலுக்கு ஒரு சிறுவனை கொண்டுபோகவேண்டி ஒரு தலைமை காவலருடன் எனக்கு டுட்டி . சந்தோசமாக சென்றேன் . இந்தமுறை வேறு ஒரு தலைமை காவலருடன் சிறுவனை கூட்டிக்கொண்டு போனோம் . பாளையம்கோட்டை வந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவனை ஒப்படைத்தோம் . தலைமை காவலருக்கு நானே சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு " ஏட்டையா! நான் எனது சொந்த ஊருக்கு சென்று வருகிறேன்" என்று சொன்னேன் . "சரி நாளைக்கு மாலையில் நமக்கு ரயில். வந்துவிடு" என்று சொன்னார். எனக்கு சந்தோசம் .
ரயிலில் புறபட்டேன். மீளவிட்டான் ரயில் நிலையத்தில் எறங்கினேன் . ஒரு கிலோமீட்டர் நடந்து போகவேண்டும் . போகும்போது புஞ்சை காட்டில் ஓடையில் சிலர் சீட்டு விளையாடிகொண்டிருந்தார்கள் . என்னை கண்டதும் ஏய் போலீஸ் வருது என்று எல்ல்லோரும் ஓடினார்கள் . நான் பக்கத்தில் போனவுடன் நம்ம ராமசாமி எல்லோரும் வாங்க என்று மற்றவர்களை கூப்பிட்டான் ஒருவன் . எல்லோரும் என்னை பார்த்து சந்தோசப்பட்டார்கள் . நீ போலீஸ் வேலையா பார்க்கிறாய் என்று ஆச்சரியமாய் கேட்டார்கள் . ஆம் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு போனேன் . அம்மாவும் தங்கை பாப்பாவும் இருந்தார்கள் . ஊரில் சொந்த பந்தங்கள் எல்லோரும் பார்த்து சந்தோசபட்டார்கள். அன்று இரவு வீட்டில் தங்கினேன் . மறுநாள் காலையில் அண்ணன் ராமர் வீட்டுக்கும் சின்னக்காள் வீட்டிற்கும் போனேன் . அவர்களுக்கும் ரொம்ப சந்தோசம் . எல்லோரிடமும் விடைபெற்று தூத்துக்குடி சித்தப்பா திரு ராமசாமி அவர்கள் வீட்டிற்கு போனேன் . சித்தி , பெரிய சித்தப்பா திரு பாண்டியன் சித்தி பிரமு , தம்பிமார் மாடசாமி , தர்மலிங்கம் எல்லோரையும் பார்த்துவிட்டு அன்றைக்கு மதிய உணவு சித்தப்பா வீட்டில் சாப்பிட்டேன் .
உடனே புறப்பட்டு பஸ்ஸில் வாகைகுளத்தில் இறங்கி திம்மராஜபுரம் ஒரு கிலோமீட்டர் நடந்து சென்றேன் அப்பொழுது புஞ்சையில் களை பறித்து கொண்டிருந்தவர்கள் அடியே நம்ம ஊருக்கு போலீஸ் வருதுடி என்று ரோட்டோரம் ஓடி வந்தார்கள் . அதில் எனது பெரியப்பா மகன் சித்ரவேல் அவர்கள் மனைவியும் வந்தார்கள் . அண்ணி என்னை தெரியவில்லையா நான்தான் ராமசாமி என்றேன் . அதன் பின்புதான் அவர்களுக்கு தெரிந்தது . பிறகு திம்மராஜபுரம வந்து அண்ணன் திரு சாமுவேல் , மாசில்லாமணி , சித்ரவேல் பெரிய வேலு , சின்னவேலு , செல்லையா , தனுஷ்கோடி மற்றும் அவர்கள் குழந்தைகள் அனைவரையும் பார்த்துவிட்டு காப்பி குடித்துவிட்டு புறப்பட்டேன் . எல்லோருக்கும் ரொம்பவும் சந்தோசம் . . அண்ணன் மாசில்லாமணி அவர்கள் நம் குடும்பத்தில் போலீஸ் வேலையில் தம்பி ராமசாமி தன முதலாவதாக சேர்ந்துள்ளான் என்று பெருமையாக சொன்னார்கள் . அதன்பின் வேகமாக புறப்பட்டு திருநெல்வேலி ரயில் நிலையம் நோக்கி வந்தேன். நேரமாகி விட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. ரயிலை தவறவிட்டு மீண்டும் ஏதேனும் பணிஷ்மன்ட் கிடைக்குமோ என்று பயந்தேன். வேகமாக நடந்தேன் . அப்போது..................