Friday 23 September 2011

தற்கொலை எண்ணம்

அப்போது ...............
அவர் என்னருகில் வந்துவிட்டார். நான் துப்பாக்கியை நீட்டினால் அவர் மேல் இடித்து விடும். எனவே நான் " சாரி சார்"  என்று கூறினேன். ஆனாலும் எனக்கு மறு நாள் ஒரு மணி நேரம் கூடுதல் கவாத்து கொடுக்கப்பட்டது.
                  பயிற்சி   பள்ளியில்   எனக்கு   ஒரு  மாதத்துக்கு  முன்னாள்   வந்த   திருநெல்வேலி   மாவட்டத்தை சேர்ந்த கூத்தன்குழி மனுவேல்   பூபாலராயர்    முடிவைததாநேந்தால் , புத்தூர்,   P.S.  சுப்பையா    ஆகியோர்   எனக்கு மிகவும்   உறுதுணையாகவும்   அவர்கள்   படித்த   சட்ட   நோட்டு  புத்தகங்களை   எனக்கு   தந்தும்   தம்பி   தம்பி என்று   பாசமாகவும் இருந்தார்கள் .   கவாத்து  செய்ய  கஷ்டப்பட்டு   யூனிபார்மை   கழட்டி பொட்டலம்   கட்டி  வைத்துவிட்டு   வேலை  வேண்டாம்   என்று   ஓடியவர்களும்   உண்டு .    எனது   குழு   கவாத்து   மாஸ்டர்   திரு   மாணிக்கம்   மிகவும்   நல்லவர் .   ஒரு நாள்    சாயங்காலம்   விளையாட்டு  நேரத்தில்   கோட்டையை   சுற்றி   பார்க்க   போவோம் .  அப்படி  சுற்றி   பார்க்கும்  பொது    வாசலுக்கு   போனோம்  .  அப்பொழுது   ஒரு   மரத்தில்  கூர்மையான   கல்லால்    எனது   காவலர்   எண்   1621 என்று மரத்தில்   குத்தி  எழுதினேன் .  பின்னாளில்   1975 – ல்    சப்  இன்ஸ்பெக்டர்  பதவி   உயர்வு   பெற்று   காவல்  பயிற்சி   கல்லூரிக்கு வரும்போது   அந்த    மரத்தில் அந்த   எனது   காவலர் எண்ணை பார்த்தேன் .   ரொம்பவும்  சந்தோசமாக   இருந்தது .    ஆறு   மாதங்கள்   காவலர் பயிற்சி முடித்து   எல்லோரும்    சேர்ந்து   படம் எடுத்து கொண்டோம்  .  பயிற்சியில் கவாத்து மற்றும்   சட்டம்   இவைகளில்    தேர்வு   ஆகவேண்டும் .    தேர்வு   ஆகாதவர்கள்    மேலும்  ஒரு   மாதம்  பயிற்சியில்   இருக்கவேண்டும் .   எனது   குழுவில்   நாராயணசாமி    என்ற  காவலர்   தேர்வாகாமல்   மேலும் ஒரு   மாதம் பயிற்சிக்காக   இருந்தார்  .    நல்லபடியாக   பயிற்சி   முடித்து 16.5.1961  அன்று    கடலூர்   மாவட்ட   காவல்   அலுவலகம்   வந்தோம் .   அங்கு   எங்கள்  அனைவருக்கும்   ரிசர்வ்   போலீஸ்   படையில்    (பிளட்டூன் ) சேர்த்தார்கள் . எனக்கு ஒரு மாதம்   முன்னாள்    பயிற்சி   முடித்து   வந்த   திரு   பி  . எஸ் . சுப்பையா,  மனுவேல் பூபாலராயர்   ஆகியோர்   மூன்றாவது   படையில்   இருந்தார்கள் .   எனக்கும்   என்னுடன்   பயிற்சி முடித்து   வந்த   பிச்சை  பிள்ளை , அங்கமுத்து ஆகியோரும்     என்னுடன்  மூன்றாவது   படையிலேயே    சேர்த்தார்கள் .  மேலும்    அந்த   ரிசர்வ் போலீஸ் படையில்   முடிவைதாநேந்தால்    புதூர்     பக்கமுள்ள   வர்தகரேட்டிபெட்டி  திரு   சொரிமுத்து ,  சுப்பையா பிள்ளை ,   புதூர்   ஸ்ரீனிவாச  மகேன்றேர்  ( இவரது   மகன்   ( திரு சாலை  பஜவண்ணன் ) தற்போது   தூத்துக்குடி    துறைமுகத்தில்   கணக்கு   அதிகாரியாகவும்   ஊர்  காவல்   படையில்   தென்   பிராந்திய   படை  தளபதியாகவும்   (கமாண்டேன்ட் )  இருந்து  வருகிறார் .   3 வது   படை பிரிவுக்கு சார்ஜன்ட்   திரு.கண்ணையா  நாய்டு   அவர்கள் இருந்தார்கள் . மிகவும்    நல்லவர் . சார்ஜென்ட்   என்பது   சப்  இன்ஸ்பெக்டர்   அந்தஸ்து . அதற்கு   மேல்  அதிகாரி   சார்ஜென்ட்  மஜார்  திரு.சாமுவேல்  அவர்கள் .   கடலூர்  வந்த   மறுநாள்   காதர்  ஆபீஸ்   போனேன் .   அங்கு  சிலபேர்   மாற்றலாகி   சென்றிருந்தார்கள்  .    திரு  சுப்ரமணிய   யார்  அவர்களும்   தஞ்சாவூர்   சென்று  விட்டார் .  அண்ணன்  ஜோதிமுத்து அவர்களும் மாற்றலாகி  போய்விட்டார்கள் .   மற்ற   நண்பர்களையும்    ஆபீசரையும்      பார்த்தேன்   எல்லோரும்  சந்தோசப்பட்டார்கள் .

தற்கொலை   முடிவு :

                       ஒருசமயம்   வேலூர்   சிறைக்கு    கைதிகளை கொண்டு  போக வேண்டியது    இருந்தது .   ஒரு   தலைமை   காவலர்  மற்றும்   4 காவலர்களும்    கடலூர்  சிறையிலிருந்து   கைதிகளை  எடுத்துக்கொண்டு    வேலூர் புறப்பட்டோம்  . விழுப்புரத்தில்   ரயில்  மாற  வேண்டும்   அதற்காக   காத்திருந்தோம் .  இரவு  நேரம் .   அதுவரை   ஒரு  காவலர் கைதிகளையும்   ஒரு காவலர் துப்பாக்கிகளையும் பார்த்து  கொள்ளவேண்டும்  .  நான்   துப்பாக்கிகளை பார்த்துக்கொண்டேன் .   இரவு இரண்டு  மணிக்கு ரயில் வரவேண்டும் . ஒன்றரை   மணிக்கு எல்லோரையும்   தயாராக சொல்லி துப்பாக்கிகளை சரிபார்த்தார் தலைமை . ஒரு   துப்பாக்கியில்   கத்தி  (பைநெட் )  இல்லை .   உடனே  என்னை   தலைமை  காவலர் கடிந்துகொண்டு " உன்   வேலை   முடிந்துவிடும்  .  தேடிப்பார்  என்று  சொன்னார் .   எல்லோருடைய   பைகளிலும்   தேடிப்பார்த்தேன்   தலைமை காவலர் பையை   மட்டும்  பார்க்கவில்லை . கத்தியை காணவில்லை .  எனக்கு   மனம்    படபடவென்று  அடித்துகொண்டது   என்ன செய்வது   என்று புரியவில்லை .   "ஏட்டையா நான் உஷாராக தான் இருந்தேன். எப்படி  காணாமல்  போனது  என்று  தெரியவில்லை" என்று புலம்பினேன்  .  ரயிலில்   கைதிகளை ஏற்றினோம்   ரயில் புறப்பட்டது .   எனக்கு   பயமாகவும்   பதட்டமாகவும் இருந்தது . "முதலில் தற்காலிக பணிநீக்கம்!    அடுத்தது   டிஸ்மிஸ் !"  என்று ஏட்டு சொன்னார் . இனி    நாம்  உயிருடன் திரும்ப  கூடாது    ரயிலிலிருந்து  குதித்து   தற்கொலை  செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது. மனம் அதையும் தாண்டி எங்கோ பறந்துகொண்டிருந்தது, ரயில் கதவை திறந்தேன். இருட்டு மிகவும் பயமாக இருந்தது. மனதை கல்லாக்கி கொண்டேன். அப்போது.........    
                                      

1 comment:

  1. we couldn't digest what you've last written mama, you are such a practical and strong personality. How on earth did such a thought come to you? Unbelievable!!! Please write next part very soon with a nice turning point.

    ReplyDelete