Monday 12 September 2011

முன்னோர்கள்!

                                   என் முன்னோர்களின் மூலக்கதை 

                 சுமார் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  அப்பொழுதுள்ள திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடியிலிருந்து  சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திம்மராஜபுரம்  என்ற குக்கிராமத்தில் மிகவும் பின்தங்கிய  ஏழை மக்கள்  வாழ்ந்துவந்தார்கள்.  அப்பொழுது இரண்டு மூன்று வருடங்கள்  மழை இல்லாத காரணத்தால் வறட்சி ஏற்ப்பட்டதால்  அங்குள்ள சிலர் குடிபெயர்ந்து செழிப்பான கிராமங்களை தேடிப்போனார்கள். அதில் ஒரு குடும்பம் திருசெந்தூர் அருகிலுள்ள  காயாம்புளி என்ற ஊரில் போய் தங்கினார்கள்.
 
                    அங்கே நெல் அறுவடை சமயம் நெல் களத்தில் பணி புரியும் பெண்கள் ஒரு ஆண் குழந்தை ( ஒரு வயது மதிக்கத்தக்கது ) அழுது கொண்டிருந்ததை பார்த்து அதை எடுத்து வைத்திருந்தார்கள். இரவாகியும் ஒருவரும் தேடி வரவில்லை. அந்த நெல் களத்திலேயே இரவு தங்கியவர்கள் அந்த குழந்தைக்கு பால் வாங்கி புகட்டினார்கள். அந்த குழந்தையின் அழகையும் அது சிரிப்பதையும் பார்த்த ஒரு பெண் "எனக்கு திருமணமாகி பத்து வருடமாகியும் குழந்தை பிறக்கவில்லை. ஆகையால் இந்த குழந்தையை நானே வளர்த்து கொள்கிறேன்"  என்று அவ்வூர் நாட்டன்மையிடம் கெஞ்சினாள்  மூன்று  நாளாகியும் குழந்தையை தேடி யாரும் வரவில்லை. 
                   அடுத்த நாள் நாட்டாண்மை அந்த குழந்தை இல்லாபெண்ணிடம் நீயே குழந்தையை வளர்த்து கொள் என்று கூறிவிட்டார். அவளுக்கோ சந்தோசம் உடனே அவள் தன் கணவரிடம் நாளைக்கே நாம் நம் ஊர் திம்மராஜபுரத்திற்கு சென்று விடுவோம். தாமதித்தால் வேறு யாராவது என் குழந்தை என்று வந்து விடுவார்கள் என்று சொன்னாள். உடனே அந்த குடும்பம் தங்கள்  சொந்த ஊரான  திம்மராஜபுரத்திற்கே வந்துவிட்டார்கள். 
                  ஊரைவிட்டு அவர்கள் சென்று இரண்டு வருடங்கள் கழித்து வந்ததால் இந்த குழந்தை அவர்கள் பெற்ற குழந்தையாக தான் இருக்கும் என்று அந்த ஜனங்கள் எண்ணி கொண்டார்கள். அப்பொழுது முதல் அங்கு நல்ல மழை பெய்து ஊர் செழிப்பானது. என் குழந்தை வந்த யோகம்  தான் இங்கு மழை வந்து ஊர் செழிப்பாக இருக்கிறது என்று அந்த குழந்தையை எடுத்து வந்தவர்களும் ஊர் மக்களும் சந்தோசப்பட்டார்கள். வருடங்கள் பல கடந்தன. பன்னீரண்டு வயதான அந்த பையன் பக்தியில் சிறந்து விளங்கினான். பள்ளிகூடங்கள் இல்லாத அந்த காலத்தில் சிறிதளவே படித்திருந்தான். அவனை அங்கு உள்ள கோயில் பூசாரியாக ஊரார் நியமித்து கோயிலுக்கு பூஜை செய்ய சொன்னார்கள். அவன் பூஜை செய்த காலம் முதல் பல வருடங்கள் அவ்வூர் செல்வசெழிப்பாக இருந்தது. அந்த குடும்பம் அடுத்தடுத்து வரும் தங்கள் முதல் மகனை பூஜரியாக்கினார்கள். ஆகையால் அந்த வீட்டார் குடும்பத்தை பூசாரி குடும்பம் என்றே அனைவரும் அழைத்தார்கள். நாளடைவில் அது அய்யர் வீட்டு குடும்பம் என்று அழைக்கவும் செய்தார்கள். 

பதினெட்டாம் நூற்றாண்டில் அந்த குடும்பம் பல ஊர்களிலும் பரவலாக வாழ்ந்து வந்தார்கள். குறிப்பாக புதியம்புத்தூர் கோரம்பள்ளம் ஒனமாக்குளம் தூத்துக்குடி போன்ற ஊர்களில் அதிகம் வாழ்ந்து வந்தார்கள் 
அவர்களில் பெரும் பாலானவர்கள் இசைகலைங்கர்களாக இருந்தார்கள். அந்தசமயம் திம்மராஜபுரத்தில் வாழ்ந்த அந்த குறிப்பிட்ட ஒரு குடும்பத்தில் ஏழு அண்ணன் தம்பிகளுக்கு ஒரே தங்கை. யாருக்கும் திருமணம் ஆகவில்லை. அந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் கள் அருந்துவதை பழக்கமாக கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு நாள் அந்த அண்ணன் தம்பிமார் கள்ளுக்கடையில் கள் அருந்திவிட்டு வரும்போது தூரத்திலிருந்து அவர்கள் வீட்டை பார்க்கும்போது யாரோ ஒரு பெண் உரலில் ஏதோ இடித்து கொண்டிருப்பதை கண்டார்கள். உடனே அவர்களில் ஒருவன் அந்த பெண் எவ்வளவு அழகாக இருக்கிறாள் பார் அவளை நானே திருமணம் செய்துகொள்வேன் என்று சொல்ல அடுத்தவன் இல்லை நான் தான் அவளை திருமணம் செய்வேன் என்று சொல்ல இப்படியே ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டே வீட்டை நெருங்கி விட்டார்கள் . பக்கத்தில் வந்து பார்த்தால் அது அவர்கள் ஒரே தங்கை தான். சகோதரர்கள் அதை நினைத்து மிகவும் வருந்தினார்கள். நீ தான் முதலில் சரியாக பார்க்காமல் சொல்லிவிட்டாய் என்று ஒருவருக்கொருவர் மனம் வருந்தி பேசி கொண்டார்கள். கடைசியாக ஏழு பேரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தார்கள். தினசரி நமது தங்கையை பார்க்கும்போது நமது மனம் வேதனை படும் அந்த வேதனையை நம்மால் தாங்க முடியாது. ஆகையால் நம் மனதை கல்லாக்கி நம் ஒரே தங்கையை கொன்று விடுவது என்று முடிவெடுத்தார்கள். வீட்டில் ஒரு அறை தனியாக கட்டவேண்டும் என்று சொல்லி அதற்கு வானம் தோண்ட வேண்டும் என்று ( அந்த காலத்தில் ஆழமான அந்த குழியை வனம் தோண்டுதல் என்று தான் சொல்வார்கள் ) ஆழமான குழியை வெட்டினார்கள். அதில் பணம் விழுந்து விட்டது என்றும் அதை எடுக்க வேண்டும் என்று சொல்லி தங்கையை உள்ளே இறக்கி விட்டார்கள். உடனே மேலே இருந்து மணலை வீசி உள்ளே வைத்து தங்கையை மூடினார்கள். அவள் கத்தினாள். கதறினாள். உங்களுக்கு ஏழேழு ஜென்மத்திற்கும் பெண் குழந்தையே பிறக்காது என்று சாபமிட்டாள்.                                                                                

                                                                                                                                பிறகு ........

4 comments:

  1. Appa! Soooperbpaa! Very Interesting! Please write the Continuation as early as possible. We are eager to read.

    Its good that we and the next generations will have a good knowledge about our history through your words.

    Try to publish a book on the same topic and it will be more useful and a good resource for us to enjoy a very good history and old memories.

    excellentpaa.

    Anbu Magal,
    Chithra.

    ReplyDelete
  2. thanks for sharing.. such new events... vaalththukkal

    ReplyDelete
  3. நன்றி திரு மதுரை சரவணன் அவர்களே!

    ReplyDelete
  4. Appa it is very interesting, these are new information that we have never heard,

    Keep the good work goingpa

    Precious words from you

    Super

    ReplyDelete