Sunday 7 October 2012

மகனை காணவில்லை

        1973 ல் தனிப்பிரிவு ஆயிவளராக திரு கணேசன் அவர்கள் வந்தார்கள்.மிகவும் நல்லவர் வல்லவர். எல்லோரையும் அனைத்து வேலை வாங்குவதிலும் அறிவுரைகள் கொடுப்பதிலும் அவருக்கு அவரே நிகர். அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். மேலும் நான் தனிப்பிரிவு அலுவல்களில் அதிகமாக நல்ல விசயங்களை கற்றுகொண்டது இவர்களிடம்தான். இந்த வருடம் எனது பெயர் பதவி உயர்வு போர்டுக்கு பரிந்துரை செய்யப்படவில்லை. ஆனால் என்னுடன் பணிபுரிந்த திரு காளிமுத்து, சுப்பையா பாண்டியன் போன்றோருக்கு பரிந்துரை செய்யப்படிருந்தது. இது எனக்கு மிகவும் வருத்தமாகவும் இருந்தது. இருப்பினும் நான் எனது பணியில் மிகவும் கவனமாகவும் திறமையுடனும் செய்துவந்தேன். எனது பணி காலத்தில் எந்தவொரு சிறு தவறுகூட கிடையாது.

மகனை காணவில்லை 
               
               மகன் முத்துக்குமரனை திருசெந்தூரில் ஒரு பள்ளியில் L.K.G.யில் சேர்த்துவிட்டேன். நன்றாக படித்துவந்தான். ஒருநாள் சாயங்காலம் நானும் எனது மனைவியும் மகன் முத்துக்குமரனும் கோயிலுக்கு சென்றோம். . திரும்பி வரும்போது எங்கள் பின்னாலேயே வந்த மகனை காணவில்லை. திரும்பி கடைக்கு ஓடினோம். எங்குமே காணவில்லை. எனக்கு ஒரே பதட்டமாக இருந்தது. இருவரும் பஸ் மற்றும் கார்களில் எல்லாம் தேடினோம். எங்கெல்லாமோ தேடினோம். மகனை கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒருவாறு மனைவிக்கு ஆறுதல் சொல்லி விட்டிற்கு அழைத்துவந்தேன். நங்கள் விட்டிற்கு வந்தோம். என் அம்மாவிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் பதறியபடி வந்தோம். என் அம்மா  என் மகனை எங்கே என்று கேட்டார்கள். என் மனைவி அழுததை பார்த்து  விட்டில் உள்ளே இருந்து ஓடி வந்தான். வீட்டிற்கு  எப்படி வந்தாய் ? என்று கேட்டதற்கு ஒரு கடையில் பத்தியும் மெழுகுவர்த்தியும் வாங்கிவிட்டு உங்களை பார்த்தேன் காணவில்லை அலுத்து கொண்டிருந்தேன். ஒரு  போலீஸ் மாமா கூட்டிவந்தார் என்று சொன்னான். என்னோடு வேலை பார்க்கும் யாரோ ஒரு போலீஸ் அவனை கூட்டி வந்தது தெரிந்து கொண்டோம். எங்களுக்கு அப்பொழுதுதான் நிம்மதி வநதது. என் அம்மா எங்களை மிகவும் திட்டி தீர்த்து விட்டார்கள்.


             ஒரு சமயம் திருசெந்தூர் கோயிலுக்கு தூத்துக்குடி  தனிப்பிரிவு புலனாய்வுத்துறை உதவி ஆயிவாளர் திரு இருமன்குலம் சுப்பையா தேவர் அவர்கள் வந்தார்கள். அவர்களை கோயிலுக்கு அழைத்துசென்று சாமி தரிசனம் செய்ய உதவியாக அனுமதி சீட்டு   வாங்கி கொடுத்து எல்லா ஏற்பாடுகளும் செய்தேன். அவருக்கு ரொம்பவும் சந்தோசம். தனிப்பிரிவு வேலை எப்படி இருக்கிறது, தூத்துக்குடியில் தனிப்பிரிவு புலனாய்வுத்துறை தலைமை காவலர்  திரு முப்பிடாதி மாற்றி போகப்போகிறார். அந்த இடத்திற்கு நீங்கள் வரலாமா என்று கேட்டார்கள். எனக்கு பதவி உயர்வு கிடைக்காத வருத்தமும் இருந்ததால் நான் வருகிறேன் என்று சொன்னேன். உடனே என்னிடம் எழுதிவாங்கினார்கள். அவர் சொன்னதுபோல் ஒரு மாதத்தில் துத்துக்குடிS.B.C.I.D க்கு  மாறுதல் உத்தரவு வந்துவிட்டது. வீட்டில் வந்து சொன்னேன் மனைவிக்கு ரொம்பவும் சந்தோசம். ஒரு வாரம் கழித்து மாறுதல் உத்தரவு பெற்றேன். தூத்துக்குடி  வந்து சித்தப்பா திரு ராமசாமி அவர்கள்  வீட்டில் சொன்னேன். அங்கு எல்லோருக்கும் ரொம்பவும் சந்தோசம்.

Saturday 6 October 2012

தனிப்பிரிவு புதிய ஆய்வாளர் !

             புதிய ஆயிவாளர் திரு மாணிக்கம் அவர்கள் மிகவும் திறமையானவர் மட்டுமில்லை எதற்கும் பதட்டப் படமாட்டார். புதிய ஆயிவாளர் அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். ஆயிவாளர் திரு விஜயரமச்சந்திரன் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விஷயம் நேரடி விசாரணைக்கு (O.E) வந்தது. அதில் பாதிக்கப்பட்ட ஆயிவாளர் திரு விஜய  ராமச்சந்திரன் அவர்கள் என்னை சாட்சியாக போட்டிருந்தார். அதை பார்த்தவுடன் எஸ்.பி அவர்கள் என்னை அழைத்து உன்னை ஏன் சாட்சியாக போட்டுள்ளார் நீ  என்ன சொல்லவேண்டும் என்று அவரிடம் கேட்டு விட்டு வா. என்று சொன்னார்கள். நான் அவரிடம் போய் கேட்டேன். அவர்கள் அந்த சமயம் நான் கேட்பதற்கு நீ  பதில் சொன்னால் போதும்  என்று சொல்லிவிட்டார். அதை நான் எஸ்.பி.அவர்களிடம் போய் சொன்னேன். ஆனால்அந்த விசாரணைக்கு  என்னை சாட்சியாக அழைக்கவில்லை. ஒரு வருடம் கழித்து எஸ்.பி. திரு சி.துரைராஜ் அவர்கள் மாற்றபட்டு திரு கே.குருவையா அவர்கள் வந்தார்கள். அவர்களுக்கும் ஆயிவாளர் திரு மாணிக்கம் அவர்களுக்கும் நல்ல தொடர்பு உண்டு. ஆகையால் மாவட்டத்தில் எது நடந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து எந்த பிரச்சினைகளும் இல்லாமல் இருந்தது. அந்த சமயம் நடந்த சட்டசபை மற்றும் உள்ளாட்சித்துறை தேர்வுகள் எதிபார்த்தபடி நல்லமுறையில் நடந்தது..