Saturday 6 October 2012

தனிப்பிரிவு புதிய ஆய்வாளர் !

             புதிய ஆயிவாளர் திரு மாணிக்கம் அவர்கள் மிகவும் திறமையானவர் மட்டுமில்லை எதற்கும் பதட்டப் படமாட்டார். புதிய ஆயிவாளர் அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். ஆயிவாளர் திரு விஜயரமச்சந்திரன் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விஷயம் நேரடி விசாரணைக்கு (O.E) வந்தது. அதில் பாதிக்கப்பட்ட ஆயிவாளர் திரு விஜய  ராமச்சந்திரன் அவர்கள் என்னை சாட்சியாக போட்டிருந்தார். அதை பார்த்தவுடன் எஸ்.பி அவர்கள் என்னை அழைத்து உன்னை ஏன் சாட்சியாக போட்டுள்ளார் நீ  என்ன சொல்லவேண்டும் என்று அவரிடம் கேட்டு விட்டு வா. என்று சொன்னார்கள். நான் அவரிடம் போய் கேட்டேன். அவர்கள் அந்த சமயம் நான் கேட்பதற்கு நீ  பதில் சொன்னால் போதும்  என்று சொல்லிவிட்டார். அதை நான் எஸ்.பி.அவர்களிடம் போய் சொன்னேன். ஆனால்அந்த விசாரணைக்கு  என்னை சாட்சியாக அழைக்கவில்லை. ஒரு வருடம் கழித்து எஸ்.பி. திரு சி.துரைராஜ் அவர்கள் மாற்றபட்டு திரு கே.குருவையா அவர்கள் வந்தார்கள். அவர்களுக்கும் ஆயிவாளர் திரு மாணிக்கம் அவர்களுக்கும் நல்ல தொடர்பு உண்டு. ஆகையால் மாவட்டத்தில் எது நடந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து எந்த பிரச்சினைகளும் இல்லாமல் இருந்தது. அந்த சமயம் நடந்த சட்டசபை மற்றும் உள்ளாட்சித்துறை தேர்வுகள் எதிபார்த்தபடி நல்லமுறையில் நடந்தது..



No comments:

Post a Comment